பெரம்பூர்: அயனாவரம் பட்டாச்சாரியா தெருவை சேர்ந்தவர் கிருபாகரன் (60). இவர் ஐ.சி.எப்.பில் கார்பென்டர் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 10 வருடங்களுக்கு முன் வியாசர்பாடி சஞ்சய் தெருவைச் சேர்ந்த ஐசிஎப் ஊழியர் கமலநாதன் (57) மற்றும் அவரது மனைவியிடம் ₹3 லட்சம் கடன் பெற்றுள்ளார். 10 சதவீத வட்டிக்கு வாங்கிய கடனுக்கு ஜாமீனாக தனது வங்கி ஏடிஎம் அட்டை மற்றும் காசோலையை கொடுத்துள்ளார். சம்பளம் பணம் வங்கியில் வந்ததும் கமலநாதன் வட்டி தொகை 30 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை கிருபாகரனிடம் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் 10 வருடமாக மாதம் 30 ஆயிரம் வட்டி கொடுத்து வந்த கிருபாகரன், 27 லட்சம் வரை வட்டி கொடுத்துள்ளார். இந்நிலையில் கிருபாகரன் ஓய்வு பணத்தில் ₹3 லட்சம் அசலை செட்டில் செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு வங்கியில் இருந்து பென்ஷன் தொகை 8 லட்சம் குறைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த கிருபாகரன் இதுகுறித்து வங்கியில் விசாரித்ததில், கமலநாதன் என்பவர் காசோலை மூலம் 8 லட்சம் எடுத்தது தெரியவந்தது.