மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கம் கிராமத்தில் சுபா என்பவர் வசித்து வருகிறார். இவர் அடகு கடையில் வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1 லட்சத்தை பையில் வைத்துக் கொண்டு அரசு பஸ்சில் டி 7 என்ற பேருந்தில் மதுராந்தகம் நோக்கி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் பஸ் நிலையத்தில் இறங்கிய போது வைத்திருந்த பணப்பையை காணவில்லை என அறிந்துள்ளார். அதனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது.