தமிழக பாஜ தலைவர் பதவியை கேட்ட விவகாரம் நாடகத்துல தமாஷ் பண்ற மாதிரி நினைச்சு பேசிட்டார்: எஸ்.வி.சேகரை கலாய்த்த தமிழிசை

சென்னை: தமிழக பாஜ தலைவர் பதவியை கேட்ட எஸ்.வி.சேகரை கிண்டலடித்துள்ளார் தமிழிசை. மதுரையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தபோது விமானநிலையத்தில் அவர் அளித்த அளித்த பேட்டி:எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் ஏன் கைது செய்யவில்லை என்பதை போலீசிடம்தான் கேட்க வேண்டும். எச்.ராஜா, ஏற்கனவே, அது எனது குரல் அல்ல என்று கூறியிருக்கிறார். சட்டப்படி அவர், அந்த பிரச்னைைய நீதிமன்றம் மூலம் அணுகி விடுதலையார்.

தமிழக பாஜ தலைவர் பொறுப்பை தன்னிடம் அளித்தால் சிறப்பாக கட்சியை வளர்ப்பேன் என்று எஸ்.வி.சேகர் கூறியிருப்பது மிகவும் தமாசானது. அவர், அதிகமாக சிரிப்பு நாடகங்களில் தொடர்ந்து நடித்து  கொண்டிருக்கிறார். எனவே இதுவும் ஏதோ ஒரு நாடகத்தில் நகைச்சுவை வசனம் பேசுவதாக நினைத்து அவ்வாறு பேசியிருக்கலாம்.

அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. பாஜவுக்கு தலைமை வகித்து நடத்துவது, அவர் நினைப்பது போல் சுலபமானதல்ல.பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. மாநில அரசு, பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் பெட்ரோலிய பொருட்களுக்கு விதிக்கும் வரியை குறைத்தாலே நன்றாக இருக்கும். அதை செய்யாமல் மத்திய அரசை குறைகூறி கொண்டிருக்கக்கூடாது. பெட்ரோலிய பொருட்களுக்கு மாற்றாக எத்தனால், பேட்டரி வாகனம் போன்றவைகளை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: