சென்னை: தமிழக பாஜ தலைவர் பதவியை கேட்ட எஸ்.வி.சேகரை கிண்டலடித்துள்ளார் தமிழிசை. மதுரையில் இருந்து நேற்றுமுன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தபோது விமானநிலையத்தில் அவர் அளித்த அளித்த பேட்டி:எச்.ராஜாவையும், எஸ்.வி.சேகரையும் ஏன் கைது செய்யவில்லை என்பதை போலீசிடம்தான் கேட்க வேண்டும். எச்.ராஜா, ஏற்கனவே, அது எனது குரல் அல்ல என்று கூறியிருக்கிறார். சட்டப்படி அவர், அந்த பிரச்னைைய நீதிமன்றம் மூலம் அணுகி விடுதலையார்.
தமிழக பாஜ தலைவர் பொறுப்பை தன்னிடம் அளித்தால் சிறப்பாக கட்சியை வளர்ப்பேன் என்று எஸ்.வி.சேகர் கூறியிருப்பது மிகவும் தமாசானது. அவர், அதிகமாக சிரிப்பு நாடகங்களில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். எனவே இதுவும் ஏதோ ஒரு நாடகத்தில் நகைச்சுவை வசனம் பேசுவதாக நினைத்து அவ்வாறு பேசியிருக்கலாம்.