வாழை இலை ஒரு கட்டு ரூ.2500க்கு ஏலம்

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று வாழை இலை விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது. முகூர்த்த நாட்கள் தொடர்ந்திருப்பதால், ஒருக்கட்டு ரூ.1500வரை ஏலம் போனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி தேர்நிலையில் உள்ள மார்க்கெட்டின் ஒருபகுதியில், வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வாழை இலை ஏலம் நடக்கிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி பழனி, ஒட்டன்சத்திரம், தென்காசி, தூத்துக்குடி பகுதிகளில் இருந்து விவசாயிகள் இலைக்கட்டுகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஒவ்வொரு வாரமும் வாழைஇலை வரத்தை பொறுத்து ஏலத்தில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.இதில், இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி ஏற்பட்டதால் பல கிராமங்களில் வாழை சாகுபடி குறைந்ததுடன், அதன் அறுவடை பணியும் மந்தமானது. இதனால் கடந்த சில மாதமாக மார்க்கெட்டுக்கு வாழை இலை வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில், கடந்த  இரண்டு வாரத்திற்கு முன்பு சுற்றுவட்டார கிராமங்களில் அவ்வப்போது பெய்த கோடை மழையால், வாழைகள் துளிர்வது அதிகரித்துள்ளது.இதையடுத்து, வாழை இலையை அறுவடை செய்து விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு அதிகளவு கொண்டுவருவதை விவசாயிகள் தொடர்ந்தனர். இதில் நேற்று நடந்த ஏல நாளின்போது, வெளியூர் வரத்து குறைவாக இருந்தது. சுற்றுவட்டார கிராம பகுதியிலிருந்தே இலைக்கட்டுகள் கொண்டுவரப்பட்டன. இருப்பினும், இன்று 13ம் தேதி மற்றும் நாளை மறுநாள் 15ம் தேதி என சுபமுகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து இருப்பதால், விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது. 100 எண்ணம் கொண்ட ஒரு இலைக்கட்டு ரூ.1800 முதல் அதிகபட்சமாக ரூ.2500வரை என வழக்கத்தைவிட கூடுதல் விலைக்கு ஏலம் போனது என வியாபாரிகள் தெரிவித்தனர்….

The post வாழை இலை ஒரு கட்டு ரூ.2500க்கு ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: