வாலிபரை வெட்டிய நான்கு பேர் கைது

 

மதுரை, ஜூலை 5: மதுரை அருகே கண்மாய்க்கு சென்ற வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை திருமோகூர் இந்திரா காலனியை சேர்ந்தவர் பிரபு(29). அப்பகுதியில் உள்ள திண்டியூர் கண்மாய்க்கு நேற்று முன்தினம் சென்றார். அப்போது அவரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த பிரபு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ஒத்தக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, அன்பு, முனீஸ், சுரேஷ், ராமர் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

The post வாலிபரை வெட்டிய நான்கு பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: