கடனை அடைக்க முடியாததால் தூக்குபோட்டு பெண் சாவு

கடலூர், ஜூலை 5: மகளிர் குழுவில் வாங்கிய கடனை அடைக்க முடியாததால் தூக்கு போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவை சேர்ந்தவர் முருகவேல் மனைவி சந்திரா(47). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சந்திரா மகளிர் குழுவில் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அந்த கடனை அவரால் அடைக்க முடியவில்லை. கடனை எப்படி அடைக்கப் போகிறோம் என்ற மன உளைச்சலில் இருந்தவர், தனது வீட்டில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடனை அடைக்க முடியாததால் தூக்குபோட்டு பெண் சாவு appeared first on Dinakaran.

Related Stories: