₹3 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம்

காரிமங்கலம், ஜூலை 5: காரிமங்கலம் ஒன்றியம் ஏ.முருக்கம்பட்டி ஊராட்சி, கிரியனஅள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, ₹3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சக்திவேல் தலைமை வகித்து, பணியை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் காசியப்பன், வார்டு உறுப்பினர் தர்மன், ஊர் கவுண்டர்கள் ராஜூ, பிரபாகரன், அங்கமுத்து, பெரியண்ணன், தேவன், பாமக நிர்வாகிகள் ரவி, சேகர், ராஜூ, பெருமாள், ராமகிருஷ்ணன், முனியப்பன், விஜய், சிலம்பரசன், மணி, செல்வம், சின்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ₹3 லட்சம் மதிப்பில் சாலை பணி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: