கடலூரில் துணிகரம் சிறுமி, பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு

கடலூர், ஜூலை 5: கடலூரில் சிறுமி மற்றும் பெண்ணிடம் 3 பவுன் தங்க செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பட்டாபிராமன் மனைவி சாந்தி (46). இவர் நேற்றுமுன்தினம் அந்த பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்கி விட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 2 ½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். இதை பார்த்த சாந்தி கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதே போல திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி நத்தவெளி சாலையில் உள்ள ஒரு பூங்காவில் விளையாடிவிட்டு தனது தந்தையுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சிறுமி கழுத்தில் அணிந்திருந்த அரை பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமி மற்றும் பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post கடலூரில் துணிகரம் சிறுமி, பெண்ணிடம் 3 பவுன் செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: