வேலூர்: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அடுத்தடுத்த 11 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ராணிப்பேடை பெல் நிறுவன குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் திருட்டு நடந்ததாக கூறப்படுகிறது. கோடை விடுமுறைக்காக அங்கு வசித்து வந்த மக்கள் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது.