மீண்டும் விதிமீறும் பள்ளி வாகனங்கள் காவல்துறை கண்காணிக்க வலியுறுத்தல்

 

தொண்டி, ஜூலை 21: தொண்டி மற்றும் சுற்றுவட்டார அரசு,தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ,மாணவியரை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர். அதனால் பள்ளி வாகனம் மற்றும் தனியார் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அரசு, தனியார் பள்ளிகள் உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்கள் உள்ளது. அரசு பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் செல்கின்றனர். பள்ளி வாகனங்களிலும் தனியார் வாகனங்களிலும் அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்கின்றனர்.

விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர் சாதிக் பாட்ஷா கூறியது, பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்கள் ஒரே வழித்தடத்தில் உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அதிகமானவர்களை ஏற்றிச் செல்கின்றனர். இதை பள்ளி செல்லும் நேரத்தின் போதும், பள்ளி விடும் போதும் பள்ளியின் அருகில் இருந்து இந்த வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும். கடந்த சில தினங்களுக்கு சிவகங்கை மாவட்டத்தில் அடுத்தடுத்த நாள்களில் பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்கி மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர் என்றார்.

The post மீண்டும் விதிமீறும் பள்ளி வாகனங்கள் காவல்துறை கண்காணிக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: