மாந்திரீகம் வைத்ததாக கூறி தூங்கிக் கொண்டிருந்த தம்பதி வெட்டி கொலை: ஒடிசாவில் பயங்கரம்

கியோஞ்சர்: மாந்திரீகம் வைத்ததாக கூறி தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை மர்ம நபர்கள் ெவட்டிக் கொன்ற சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டம் டைதாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரசூல் ஜுமுகிபதியா சாஹி கிராமத்தில் மர்மமாக இறந்து கிடந்த தம்பதியரின் உடல்களை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து கியோஞ்சர் காவல் கண்காணிப்பாளர் மித்ரபானு மொஹபத்ரா கூறுகையில், ‘இறந்த தம்பதியின் மகள் சிங்கோ அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கோவின் தந்தை பஹ்தா முர்மு மற்றும் அவரது தாய் தானி  ஆகியோர் சம்பவ நாளில் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது சிங்கோ வீட்டின்  அறைக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். திடீரென அலறல் சத்தம் கேட்டு  வெளியே வந்து பார்த்தபோது, தனது ​​பெற்றோர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இருவரையும் கொன்றது யார்? என்பது தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த தம்பதியின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். இந்த கொலைகளுக்கான காரணம், மேற்கண்ட தம்பதிகள் குறிப்பிட்ட சிலருக்கு மாந்திரீகம் மற்றும் சூனியம் வைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொலை சம்பவம் நடந்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்றார். …

The post மாந்திரீகம் வைத்ததாக கூறி தூங்கிக் கொண்டிருந்த தம்பதி வெட்டி கொலை: ஒடிசாவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: