மன்னார்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா

மன்னார்குடி: மன்னார்குடி பகுதியில் இருந்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி அடைந்து பணி ஆணை பெற்ற வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா, அரசுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ரமேஷ் பனா தலைமை வகித்தார். அரசு உதவிபெறும் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தனி வட்டாட்சியர் குணசீலி, மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் நிறுவனர்கள் செந்தில் பக்கிரிசாமி, சதீஷ், நிரஞ்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதுகலை ஆசிரியரும் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளருமான அன்பரசு, சிறப்பு அழைப்பாளர் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி ஆகியோர் பேசினர்.இதில், போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் முறைகள் குறித்தும், எழுத்து தேர்விலும், நேர்முகத் தேர்விலும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், போட்டித் தேர்வுகளுக்கு படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து கோட்டாட்சியர் எடுத்துரைத்தார். தொடர்ந்து கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் பணி ஆணை பெற்றவர்களுக்கு பரிசு, பணி பதிவேட்டினையும் ஆர்டிஓ வழங்கினார்.

The post மன்னார்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: