தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் நடைபயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல்

தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் நடைபயிற்சிக்கு வந்தவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி கோரிக்கைகளை கேட்டறிந்தார். தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேற்று அன்னை சத்தியா விளையாட்டு திடலில் நடைபயிற்சி மேற்கொள்ள வந்தார். சத்தியா நடைபயிற்சியாளர்கள் சங்க தலைவர் சீனிவாசன், பொருளாளர் பார்தசாரதி, உள்ளிட்ட நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்பொழுது நடைபயிற்சியாளர்கள் விளையாட்டு வீரர்கள், அலுவலர்கள் முரசொலிக்கு வாழ்த்து தெரிவித்து கலந்துரையாடினர்.

சத்தியா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் நீச்சல் குளம் புனரமைக்கும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியிடம் கூடைப்பந்து பயிற்றுனர் பாபு, நீச்சல் பயிற்றுனர் ரஞ்சித் உள்ளிட்டவர்கள் நீச்சல் குளம் புனரமைப்பு பணிகள் குறித்துவிளக்கினர். அப்பொழுது தஞ்சைக்கு தேவையான ரயில் திட்டங்கள் குறித்தும், சாலைகள் குறித்தும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

The post தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் நடைபயிற்சியாளர்களுடன் கலந்துரையாடல் appeared first on Dinakaran.

Related Stories: