மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

பல்லடம்,செப்.3: பல்லடம் அருகேயுள்ள கொடுவாயில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சண்முகசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.கழக ஆட்சி மன்ற குழுச் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் புத்தரச்சல் பி.கே.மணி வரவேற்றார். தலைமை கழக அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ் சிறப்புரை நிகழ்த்தினார். கூட்டத்தில் செப்டம்பர் 15 ம்தேதி பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழா மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வது, வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிட வேண்டும். ரேஷன் கடையில் தேங்காய் எண்ணெயை வினியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஆர்.ஆர்.ரவி,மாவட்ட கழக துணை செயலாளர்கள் பழனிசாமி, சாமிநாதன்,செந்தில்குமார், மாநில இளைஞரணி துணை செயலாளர் ரத்தினசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் திருநாவுக்கரசு, நெசவாளர் அணி துணை செயலாளர் கிச்சப்பன், திருப்பூர் மாநகர மாவட்டத்தின் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாமன்ற உறுப்பினர் குமார், புறநகர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் ரத்தினசாமி,பொதுக்குழு உறுப்பினர்கள், நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மதிமுக செயல் வீரர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: