பெருமாநல்லூர் ஆண்கள் பள்ளியை இருபாலர் படிக்கும் பள்ளியாக தரம் உயர்த்திய அமைச்சருக்கு நன்றி

திருப்பூர், ஜூன் 27: திருப்பூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் வாரம் தோறும் புதன்கிழமை மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். இதில், பொது மக்களிடமிருந்து பெறப்படும் புகார் மனுக்கள் மாவட்ட எஸ்பி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு தீர்வு ஏற்படுத்தப்படும். இந்நிலையில், நேற்று எஸ்.பி அலுவலகத்தில் எஸ்.பி அபிஷேக் குப்தா தலைமையில் நடத்தப்பட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாமில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி கலந்து கொண்டார். முகாமில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொது மக்களிடமிருந்து 15 புகார் மனுக்கள் பெறப்பட்டது.

பெறப்பட்ட மனுக்களை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பவானிஸ்வரி மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை காவல் நிலைய அதிகாரிகள் முன்னிலையில் ஆஜர் படுத்தி விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்தினார்.

The post பெருமாநல்லூர் ஆண்கள் பள்ளியை இருபாலர் படிக்கும் பள்ளியாக தரம் உயர்த்திய அமைச்சருக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: