திருப்பூரில் இன்று உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான ஆலோசனை முகாம்

 

திருப்பூர், ஜூன் 29: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனை வழங்கக்கூடிய வகையிலான முகாம் இன்று (29ம்தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 76 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 2023-24ம் கல்வி ஆண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முகாம் நடைபெறுகிறது.

தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், ஐடிஐ, நர்சிங் கல்லூரிகள் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு வசதியாக நாளைய தினம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி சார்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இந்த முகாமினை 12ம் வகுப்பு முடித்து உயர்கல்வி பயில விரும்பும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

The post திருப்பூரில் இன்று உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கான ஆலோசனை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: