மணல் கடத்தியவர் கைது

திருச்சி, ஜூன் 24: திருச்சியில் மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். ரங்கம், திருவளர்ச்சோலை செங்கல் சூலை அருகே போலீசார் கடந்த 22ம் தேதி ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு உரிய அனுமதியின்றி காவிரி ஆற்றில் சிலர் மணல் அள்ளியது தெரிந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (33) என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து 7 மூட்டை மணல் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பியோடிய சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

The post மணல் கடத்தியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: