பேரையூர் பேரூர் திமுகவின் புதிய பொறுப்பாளர் மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

திருமங்கலம், ஜூலை 11: மதுரை தெற்கு மாவட்டம் பேரையூர் பேரூர் திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள வருசைமுகமது, திருமங்கலத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறனிடம் வாழ்த்து பெற்றார். பேரையூர் பேரூர் கழக திமுக செயலாளராக இருந்த பாஸ்கரன் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து புதிய பேரூர் பொறுப்பாளராக பேரையூரை சேர்ந்த வருசைமுகமது நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் திருமங்கலத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதேபோல் தெற்கு மாவட்ட இலக்கிய அணிக்கு புதியதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தலைவராக கணேசன், துணைத்தலைவராக ஜஸ்டின் திரவியம், அமைப்பாளராக விஜய், துணை அமைப்பாளர்களாக இன்பம், தமிழ்ராஜா, பாலகிருஷ்ணன், ராக்கெட், பிரசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, இலக்கிய அணியின் புதிய நிர்வாகிகளும் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

The post பேரையூர் பேரூர் திமுகவின் புதிய பொறுப்பாளர் மாவட்ட செயலாளருடன் சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: