ஊர் திரும்ப போதிய பேருந்துகள் இல்லை என கூறி கிரிவலம் வந்த பக்தர்கள் திடீர் மறியல்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு வந்த கிரிவல பக்தர்கள் ஊர் திரும்ப போதிய பேருந்துகள் இல்லை என்று கூறி மறியல் போராட்டம நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சித்ரா பௌர்ணமி கிரிவலத்துக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் திருவண்ணாமலை திக்குமுக்கானது. புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளுக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.

இதனால் திண்டிவனம் சாலையில் உள்ள பேருந்து நிலையம் முன் பக்தர்கள் திடீர் மறியலில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் தள்ளுமுள்ளு உருவானது. போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் ரயில் நிலையங்களில் குவிந்தனர். காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த ரயிலில் பயணிகள் ஆபத்தான நிலையில் படிகளில் தொங்கியபடி பயணம் செய்தனர்.

Related Stories: