திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

சென்னை: திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு :திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அடுத்த திருராமேஸ்வரம் கிராமம், கோட்டகச்சேரி பகுதியிலுள்ள கோவில் திருவிழாவிற்கு கடந்த 29ம் தேதி இரவு ராமதாஸ் என்பவரின் மகன் மதன்ராஜ் (15) விளம்பரப் பதாகைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும்போது எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மின்மாற்றியில் இரும்பு கம்பியுடன் கூடிய விளம்பர பதாகையில் உராய்வு ஏற்பட்டதன் காரணமாக மின்சாரம் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ரூபன் (வயது 19) என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.2 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவனின் பெற்றோருக்கு ரூ.50,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post திருவாரூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: