பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு போட்டி

தர்மபுரி, செப்.17: பென்னாகரம் அருகே குள்ளனூர் மேல்நிலைப் பள்ளியில், உலக ஓசோன் தினத்தையொட்டி சுற்றுச்சூழலை பாதுகாப்பையொட்டி, மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர், உலக ஓசோன் தினம் தொடர்பாக மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிங்காரவேலன் தலைமை வகித்தார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் பசுமைப் படை ஒருங்கினைப்பாளர் கண்ணன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post பள்ளி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு போட்டி appeared first on Dinakaran.

Related Stories: