நீலகிரி சிட்டி 3 நீலகிரி மக்கள் நீதிமன்றத்தில் 777 வழக்குகளுக்கு தீர்வு

ஊட்டி,மே14:நீலகிரியில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 777 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான டாக்டர் முருகன் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் காசோலை மோசடி வழக்குகள், சொத்து சம்பந்தமான வழக்குகள்,வங்கி வழக்குகள்,வராக் கடன் வழக்குகள், குடும்ப பிரச்னை சம்பந்தமான வழக்குகள் என 1200க்கும் மேலான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் சமரச முறையில் பேசி ரூ.5 ேகாடியே 97 லட்சத்து 56 ஆயிரத்து 498 மதிப்பிலான 777 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

The post நீலகிரி சிட்டி 3 நீலகிரி மக்கள் நீதிமன்றத்தில் 777 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: