திருவள்ளூர் ரோட்டரி சங்க தலைவர் பதவியேற்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ரோட்டரி சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சங்க தலைவராக பி.ரூப்குமார், செயலாளராக என்.கிருஷ்ணன், பொருளாளராக கே.ஆர்.ஆறுமுகம், சங்கப்பணி ஒருங்கிணைப்பாளராக வி.தனசேகரன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில் மிகவும் நலிவடைந்த பெண்ணுகளுக்கு தையல் இயந்திரம், மணவாளநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டிங் மிஷின் ஆகியவற்றை வழங்கினார். இதில் நகரமன்ற தலைவர் உதயமலர் பாண்டியன், மாவட்ட ஆளுநர் ஜே.கே.என்.பழனி, மாவட்டசெயலாளர் ஆர்.டி.என்‌.கோபிநாத், நடிகரும் இயக்குனருமான ரமேஷ் கண்ணா ஆகியோர் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் ரா.சி.திராவிடமணி, அர்ஜுனா ஏ.குமரன், எச்.ஜெயபிரகாஷ், ஜெ.சரவணகுமார், எஸ்.சுரேஷ், டி.ஆர்.எஸ்.சந்துரு, பி.சீனிவாசன், டி.ஆர்.பாலாஜி, எஸ்.மூர்த்தி, டி.டொனால்டு, எஸ்.ராஜேந்திரன், கே.எஸ்.முத்துகிருஷ்ணன், டி.ஜான் ராஜேஷ், டி.செல்வகுமார், அ.லாலு, பா.இளையமாறன், கே.தேவராஜன், ஜேம்ஸ் ஜெயராஜ், கே.வித்யாசாகர் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்….

The post திருவள்ளூர் ரோட்டரி சங்க தலைவர் பதவியேற்பு விழா appeared first on Dinakaran.

Related Stories: