திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி

 

திருப்பூர், மே 6: திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான ஜமாபந்தி வருகிற 23-ந் தேதி முதல் தொடங்குகிறது. பல்லடம் தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கலெக்டர் வினீத் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது. திருப்பூர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் வருகிற 23, 24-ந் தேதிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் தலைமையிலும், ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையிலும் ஜமாபந்தி நடக்கிறது.

The post திருப்பூர் மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் ஜமாபந்தி appeared first on Dinakaran.

Related Stories: