பள்ளி கட்டுமான பணிக்கு ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கீடு : திமுக எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

வேளச்சேரி: சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நன்மங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு 2 வகுப்பறை கட்டுவதற்காக ரூ.12.10 லட்சம் நிதி ஒதுக்கியதையடுத்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை ஒன்றிய திமுக செயலாளரும், மேடவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ப.ரவி. கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அ.ரங்கநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சமாதானம் நல்லமுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் சற்குனம் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: