சென்னை திருக்கழுக்குன்றம் அருகே குடிசை இடிந்து வயதான தம்பதி, மகன் படுகாயம் Nov 13, 2021 திருப்பலுக்கன்ரம் ஏழுமலை திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகர் யசோதா ஐயப்பன் படுகாயம் திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகரை சேர்ந்தவர் ஏழுமலை (65). இவரது மனைவி யசோதா (60). இவர்களது மகன் ஐயப்பன் (23) ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு தங்களது பழமையான குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக இவர்களது குடிசை வீட்டின் மண் சுவர் ஈரமாகி இருந்தது. இதனால், நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் அந்த பழமையான பெரிய மண் சுவர் திடீரென தூங்கிக் கொண்டிருந்த ஏழுமலை உள்ளிட்ட 3 பேர் மீதும் இடிந்து விழுந்தது. இதில், 3 பேரும் சுவற்றின் இடிபாடுகளில் சிக்கி அலறி கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேர் மீதும் விழுந்த மண் சுவற்றை நீண்ட நேரம் போராடி அகற்றி காப்பாற்றினர். மேலும், அவர்கள் 3 பேரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு 3 பேரும் ஆபத்தானநிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவலறிந்த வருவாய் துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்பித்துள்ளனர். தந்தை, தாய், மகன் மீது பெரிய சுவர் விழுந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. … The post திருக்கழுக்குன்றம் அருகே குடிசை இடிந்து வயதான தம்பதி, மகன் படுகாயம் appeared first on Dinakaran.
கடலில் கலந்து மழைநீர் வீணாவதை தடுக்க ₹350 கோடியில் வெள்ள தடுப்பு பணி: செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரம்
வாடகை வீட்டில் தேர்தல் பணிமனை அமைக்க போலி ஆவணம் தயாரித்த வழக்கில் பாஜ மண்டல தலைவர் கைது: சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது விசாரணையில் அம்பலம்
நீட் தேர்வு ஒரு தேசிய பிரச்னையாக மாறி உள்ளது தமிழகத்தின் வரி பகிர்வில் ஒன்றிய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது: தயாநிதி மாறன் எம்.பி. பேட்டி
புதிய டெண்டர் விடும்வரை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை வைத்து பார்க்கிங் கட்டணம் வசூலிக்க முடிவு: மாநகராட்சி அறிவிப்பு
மெரினா கடற்கரையில் சுற்றுலா பயணியிடம் வழிப்பறி கர்நாடக வாலிபர்கள் சிக்கினர்: விரட்டி பிடித்த காவலருக்கு கமிஷனர் பாராட்டு
சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ₹8.5 கோடி தங்கம் பறிமுதல்: விமான நிலைய ஊழியர், பயணி கைது
மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் திட்ட பணிகளை பருவ மழைக்குள் முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி உத்தரவு
பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய டெண்டர் விடும் வரை மெரினா, பெசன்ட் நகர், பாண்டி பஜாரில் கட்டணம் இன்றி வாகனங்கள் நிறுத்தலாம்: மாநகராட்சி அதிகாரி தகவல்
தடுமாறி கீழே விழுபவர்கள் சக்கரத்தில் சிக்காமல் தடுக்க 1,315 மாநகர பேருந்துகளின் பக்கவாட்டில் தடுப்பு கம்பி: மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை
நடப்பு காரீப் பருவத்திற்கு தேவையான உரம், இடுபொருட்கள் போதிய இருப்பு உள்ளது: கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
மெரினா கடற்கரையில் இரவில் நேர கட்டுப்பாடு இன்றி மக்களை அனுமதித்தால் சட்ட விரோத செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
கணவரின் இதய நோய்க்காக மருத்துவமனை வந்தபோது பிரதமர் ₹10 லட்சம் தருவதாக கூறி மூதாட்டியிடம் 5 சவரன் அபேஸ்: மர்ம நபருக்கு வலை
முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ₹525 கோடி மோசடி மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை: பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாக தேவநாதன் மீது புகார்
டைடல் பார்க் பகுதியில் ₹108 கோடியில் கட்டப்படும் ‘U’ வடிவ மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல்