தமிழகம் எங்கள் ஏரியா; பாஜக நுழைய முடியாது; இங்கு பாஜகவின் பாட்சா பலிக்காது : மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!!

சென்னை : பாம்பு, பல்லிக்கு உள்ள விஷத்தை விட எடப்பாடி பழனிசாமிக்கு விஷம் அதிகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆர்,கே.நகர், துறைமுகம், பெரம்பூர் என பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘தோல்வி பயத்தால் திமுக மீதான குற்றச் சாட்டுகளை நாளிதழ்களில் 4 பக்க விளம்பரமாக அதிமுக வெளியிட்டுள்ளது.பொய்யான செய்தியை முதல் பக்கத்தில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி அதிமுக வெற்றி பெற நினைக்கிறது.எங்கள் மீது தவறு இருந்திருந்தால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். திமுகவினர் மீது 10 ஆண்டுகளில் ஒரு வழக்கை கூட பதிவு செய்ய முடியவில்லையே. அதிமுகவினரின் பொய் விளம்பரங்களை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை.  அவர்கள் கனவு ஒருபோதும் பலிக்காது.பொய் விளம்பரங்கள் கொடுத்து ஏமாற்றும் அதிமுக கூட்டணிக்கு மக்கள் ஏப்ரல் 6ம் தேதி பாடம் புகட்டுவார்கள்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட்டத்தில் 13 பேர் அதிமுக அரசால் சுட்டுக் கொல்லப்பட்டதை மறக்க முடியுமா ?பொள்ளாச்சியில் அப்பாவி இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை மறக்க முடியுமா ?.பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிறப்பு டிஜிபி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை மறக்க முடியுமா?.பாம்பு, பல்லிக்கு உள்ள விஷத்தை விட எடப்பாடி பழனிசாமிக்கு விஷம் அதிகம்.  காலில் விழுந்துபதவியை வாங்கிவிட்டு சசிகலாவுக்கு துரோகம் செய்த பழனிசாமிக்கு விஷம் அதிகம்,’ என்று பேசினார். …

The post தமிழகம் எங்கள் ஏரியா; பாஜக நுழைய முடியாது; இங்கு பாஜகவின் பாட்சா பலிக்காது : மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!! appeared first on Dinakaran.

Related Stories: