தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்

ஊட்டி: நீலகிரி கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜூலை 11ம் தேதி காலை 11 மணியளவில் நீலகிரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே தபால்துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலக கண்காணிப்பாளர், நீலகிரி கோட்டம், ஊட்டி 643001 என்ற முகவரிக்கு வரும் 5ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அஞ்சலக கண்காணிப்பாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.

The post தபால் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: