ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தினரால் அப்பாவி மக்கள் சுட்டுக்கொலை.....கல்லூரி மாணவிகள் போராட்டம்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக கூறி கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லால் சவுக் என்ற இடத்தில் திரண்ட கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காஷ்மீர் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டாகும்.

இதனை வலியுறுத்தி அரசுக்கு எதிராக மாணவிகள் முழக்கங்களை எழுப்பினர். போராட்டம் நடத்திய மாணவிகளை போலீசார் விரட்டியடித்தனர். சோபியான் மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories: