தண்டலம் அரசு பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், தண்டலம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தண்டலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு, போதிய குடிநீர் வசதி இல்லாமல் இருந்தது. இதையடுத்து, தனியார் வங்கி சார்பில் பள்ளி வளாகத்தில் ரூ.1.5 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. அதன் துவக்க விழா நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். தண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், ஊராட்சி செயலர் ரமேஷ், திமுக அவை தலைவர் மோகன உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post தண்டலம் அரசு பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: