டெல்லிக்கு புதிய துணை நிலை ஆளுநர் நியமனம்

புதுடெல்லி: டெல்லிக்கு புதிய துணை நிலை ஆளுநர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.டெல்லி துணை நிலை ஆளுநராக இருந்தவர் அனில் பைஜால். இவர், தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு  அனுப்பி வைத்தார். பைஜாலின் ராஜினாமாவை தொடர்ந்து டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய் குமார் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார். அதில், சக்சேனா துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கும் நாளிலிருந்து பதவி அமலுக்கு வரும். சக்சேனா சமீப காலம் வரை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவராக இருந்தார். தற்போது அவா் டெல்லி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்….

The post டெல்லிக்கு புதிய துணை நிலை ஆளுநர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: