டீக்கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு

 

திண்டுக்கல், ஜூலை 13: திண்டுக்கல் பஸ்நிலையம் எதிரில் நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது கடைக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் கல்லாவில் வைத்திருந்த ரூ.15,000 பணம் திருடு போனது தெரிய வந்தது.

இதேபோல், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட ஜெயபால் என்பவரின் கடையின் ஷட்டரும், பழைய காம்ப்ளக்ஸில் ஜூஸ் கடை வைத்திருக்கும் வியாபாரியின் கடையையும் உடைக்க முயற்சி நடந்துள்ளது. இது குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

The post டீக்கடையில் ரூ.15 ஆயிரம் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: