ஜெயங்கொண்டம் அருகே புகையிலை விற்ற வாலிபர் கைது

ஜெயங்கொண்டம்,டிச.22: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் சாமிதுரை மற்றும் போலீசார் விளாங்குடி கைகாட்டி கடை வீதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விளாங்குடி கைகாட்டி முட்டுவாஞ்சேரி ரோட்டை சேர்ந்த அசோக்குமார்(40) என்பவர் தனது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான சுவாகத் போதை பாக்கு 13 பண்டல், ஹான்ஸ் பாக்கெட், கூலிப் 14 பாக்கெட்களும் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிந்த போலீசார் அசோக்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே புகையிலை விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: