ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் நேற்று ஆலந்தூர், மடுவின்கரை, மாதவபுரம், வேம்புலி அம்மன் கோயில் தெரு, கொத்தவால் தெரு, ராஜா தெரு, கண்ணன் காலனி போன்ற பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருக்கு தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் பிரசாத் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். எம்பிக்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன் ஆகியோர் உடன் சென்று பிரசாரம் செய்தனர். அப்போது, டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்ததும் இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு முதல் கையெழுத்திடப்படும். கொரோனா நிதியாக ₹4 ஆயிரம் வீடு தேடி வரும். எனவே, தா.மோ.அன்பரசனை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,’’ என்றார்.