சென்னையில் வாக்காளர்களுக்கு பட்டுப்புடவைக்கான டோக்கன் அச்சடிப்பு: அதிமுக வேட்பாளர் உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை!!!

சென்னை: சென்னையில் வாக்காளர்களுக்கு பட்டுப்புடவை வழங்க டோக்கன் அச்சடித்த குற்றச்சாட்டு தொடர்பாக 4 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணியில் பகவதியப்பன் என்பவருக்கு சொந்தமான அச்சுக் கூடத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள் வழங்குவதற்காக 10,000 டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டதாக கிடைத்த தகவலை அடுத்து, திமுகவினர் அச்சுக்கூட உரிமையாளர் பகவதியப்பனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் பகவதியப்பனிடன் நடத்திய விசாரணையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியின் 143-வது வார்டில், அதிமுக சார்பில் போட்டியிடும் இமானுவேல் என்பவர் வாக்காளர்களுக்கு பட்டுச் சேலைகள் வழங்க டோக்கன்கள் அச்சடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. டோக்கன்களும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து தேர்தல் பொறுப்பாளர் அருண்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அச்சக உரிமையாளர் பகவதியப்பன், அச்சக மேலாளர் வசந்த், ஆட்டோ ஓட்டுநர் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிமுக வேட்பாளர் ஏஜென்ட் தனசேகர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிமுக வேட்பாளர் இமானுவேலிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.         …

The post சென்னையில் வாக்காளர்களுக்கு பட்டுப்புடவைக்கான டோக்கன் அச்சடிப்பு: அதிமுக வேட்பாளர் உட்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை!!! appeared first on Dinakaran.

Related Stories: