சண்டிகர் :பஞ்சாப் முன்னாள் முதல்வரும், ஷிரோமணி அகாலிதளத் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் இன்று இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம விபூஷனை அரசுக்கு திருப்பி அனுப்பினார். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 8வது நாளாக போராடி வருகின்றனர்.விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில் 2015’ம் ஆண்டில் பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட 92 வயதான பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்திற்கு வழங்கப்படும் அலட்சியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பத்ம விபூஷண் விருதை திருப்பி அனுப்பிய பிரகாஷ் சிங் பாதல்..!
