சாலையை மறைத்த மூடுபனியால் அவதி

ராயக்கோட்டை, ஜன.14: ராயக்கோட்டையில் கடும் மூடுபனி நிலவியதால், வானக ஓட்டிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில், நேற்று அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவியது. எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவிற்கு, பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். அதிகாலையில் ஓசூர் மற்றும் பெங்களூரு பகுதிகளுக்கு டூவீலர்களில் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பனிமூட்டத்தினாலும், கடுங்குளிராலும் தவித்தனர்.

ஓசூர், கெலமங்கலம் உள்ளிட்ட மாநில எல்லை பகுதிகளில், காலை 10 மணிக்கு மேல்தான் பனியின் தாக்கம் சற்று குறைந்தது. சூளகிரி: சூளகிரி சுற்றுவட்டார பகுதியில் நள்ளிரவு முதல் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

The post சாலையை மறைத்த மூடுபனியால் அவதி appeared first on Dinakaran.

Related Stories: