சார் பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் விநியோகம்

மதுரை, ஜூலை 13: சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் ஆவண பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களுக்கு கூடுதலாக டோக்கன் ஒதுக்கீடு செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆனி மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், வழக்கப்படும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, மதுரை நகர் மற்றும் மாவட்டத்தில் ஒத்தக்கடை, சோழவந்தான், மேலூர் உள்ளிட்ட பகுதிகளில் சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டது. இதனால் மற்ற நாட்களை விட அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

The post சார் பதிவாளர் அலுவலகத்தில் கூடுதல் டோக்கன் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: