கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது

சேலம், பிப்.6: சேலம் அய்யந்திருமாளிகை மாரியம்மன்கோயில் பகுதியை சேர்ந்தவர் குரு (எ) சசிகுமார் (33). இவர் மீது அழகாபுரம் போலீசில் கொலை முயற்சி வழக்கு நிலுவையில் உள்ளது. சேலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஆஜராகாமல் குரு தலைமறைவானார். இதனால் அவரை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து அழகாபுரம் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார், 4 மாதமாக தலைமறைவாக உள்ள குருவை தீவிரமாக தேடினர். அதில் நேற்று குருவை அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: