மனைவி மாயம் 50 வயதானவர் மீது போலீசில் புகார்

சேலம், ஜூன் 8: சேலம் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் மணி, தறித்தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி(40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். புவனேஸ்வரி அதே பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் காலை, பால் வாங்கி கொண்டு வருவதாக கூறி சென்ற புவனேஸ்வரி, பின்னர் வீடு திரும்பவில்லை. எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், அவரது கணவர் மணி ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில், தனது மனைவி காணாமல் போனதற்கு கந்தசாமி(50) என்பவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவி மாயம் 50 வயதானவர் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: