கொரோனா பரவல் ஆளுநர்களுடன் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா பரவல் கட்டுப்பாட்டை நிர்வகித்தல் தொடர்பாக அனைத்து மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 8ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், முதல் முறையாக பிரதமர் மோடி அனைத்து மாநில ஆளுநர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அந்தந்த மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதம் குறித்து ஆளுநர்களுடன் ஆலோசிக்கும் மோடி, மாநில அரசுகளுடன் ஆளுநர்கள் இணைந்து பணியாற்றுமாறு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் மாலை 6 மணிக்கு தொடங்கும். இதில் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவும் பங்கேற்கிறார்….

The post கொரோனா பரவல் ஆளுநர்களுடன் மோடி இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: