காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

 

காரைக்கால்: காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திகடன் செலுத்தினர்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தலத்தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த  தங்க மாரியம்மன் கோயிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி நாளான நேற்று முன்தினம் தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட  தங்க மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும் தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதியின் போது வான வேடிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post காரைக்கால் தங்க மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: