காதல்ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின், செல்போன் பறிப்பு

 

பாடாலூர், பிப். 5: பெரம்பலூர் அருகே காதலர்களை கத்தியைக் காட்டி மிரட்டி செயின், செல்போனை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மங்கூன்- சிறுவயலூர் செல்லும் சாலையில் நேற்று மாலை ஒரு காதல் ஜோடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 2 மர்ம ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டி அந்தப் பெண்ணிடம் சுமார் ஒரு பவுன் செயின், செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

அப்போது அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இதையடுத்து மர்ம ஆசாமிகள் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடினர். இது குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் டிஎஸ்பி பழனிச்சாமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து பாடாலூர் போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post காதல்ஜோடியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயின், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: