கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

 

ராமநாதபுரம், பிப்.5: ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி உதவித் தொகைக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்ததாவது, ‘‘அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ-மாணவியருக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த மாணவ,மாணவியருக்கு இலவச கல்வித் திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நடப்பாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Student Login சென்று ஆதார் எண் அளித்து e-KYC Verification செய்யவேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் புதியதிற்கு 1.2.2024 முதல் செயல்பட தொடங்கியுள்ளது. புதியதிற்கான விண்ணப்பங்கள் மாணாக்கர்களால் 29.02.2024 -க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளரையோ அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தையோ அணுகவும் என தெரிவித்துள்ளார்.

The post கல்வி உதவித் தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: