கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய 2 பேர் தற்காலிகமாக நீக்கம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: கலைஞர் நகர் வடக்கு பகுதி 129அ-வது வட்டத்தை சேர்ந்த பிரவீன் மற்றும் ஏகாம்பரம் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் வடக்கு பகுதி 129அ-வது வட்டத்தைச் சேர்ந்த எஸ்.பிரவீன் மற்றும் சி.ஏகாம்பரம் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும், செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள். இவ்வாறு பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்திய 2 பேர் தற்காலிகமாக நீக்கம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: