எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

தூத்துக்குடி, ஜூன் 22: தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவின்படி புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற முகாமில் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்த 14 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 41 பேர் என மொத்தம் 55 மனுதாரர்கள் புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி பாலாஜி சரவணன், உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: