உக்ரைன் போரால் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச அளவில் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வை தடுக்க ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை மக்களவை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். அதன் விவரம் வருமாறு: * ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையில் இருந்து இந்திய நுகர்வோர்களை காப்பதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பினார். * ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து இந்திய எரிபொருள் சந்தையை பாதுகாக்க ஒன்றிய அரசு எடுத்த அல்லது எடுக்க போகும் நடவடிக்கைகள் என்ன என கேள்வி எழுப்பினார். * உலகளாவிய சூழ்நிலை காரணமாக உயர்ந்து வரும் பெட்ரோல் விலையினை குறைப்பதற்கோ அல்லது இந்திய நுகர்வோர்களுக்கு மானியன் வழங்குவது தொடர்பாக ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வகுத்துள்ளதா எனவும், எனில் அது குறித்த விவரங்களை தெரியப்படுத்தவும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்….

The post உக்ரைன் போரால் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை? நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: