இந்தியாவை உலுக்கும் கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 3,874 பேர் பலி; 2.76 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,874 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 2,76,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,57,72,440 ஆக உயர்ந்தது.
* புதிதாக 3,874 பேர் உயிரிழந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,122 ஆக உயர்ந்துள்ளது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,69,077 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  2,23,55,440 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31,29,878 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சதவிகிதம் 86.74% ஆக அதிகரித்துள்ளது.
* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.11% ஆக அதிகரித்துள்ளது.
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 12.14% ஆக அதிகரித்துள்ளது.
* இதன் மூலம், நாட்டின் இதுவரை 18,70,09,792  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

The post இந்தியாவை உலுக்கும் கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 3,874 பேர் பலி; 2.76 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று appeared first on Dinakaran.

Related Stories: