ஆலங்குடி அருகே தாணான்டியம்மன் கோயில் தேரோட்டம்

ஆலங்குடி: ஆலங்குடி அருகே உள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயில் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். ஆலங்குடி அருகே உள்ள அணவயல் தாணான்டியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து, தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் திருவீதியுலாவும் நடந்து வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து வானவேடிக்கைகள் முழங்க மா, பலா, வாழை என முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வீற்றிருக்க ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரை முக்கிய வீதி வழியாக பக்தர்கள் இழுத்து வந்தனர். இதை தொடர்ந்து, அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருவிழாவில், அணவயல், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்ட சாமி தரிசனம் செய்தனர்.

The post ஆலங்குடி அருகே தாணான்டியம்மன் கோயில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Related Stories: