அரசு பள்ளி மாணவர்கள் யோகாவில் தேசிய சாதனை

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி மாணவர்கள், யோகாவில் தேசிய சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சாதனை முயற்சியை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்று பார்வையிட்டனர். 100 மாணவ, மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக 100 மீட்டர் நீளத்துக்கு இணைந்து டிராகன் வடிவில் உட்கார்ந்து 12 நிமிடங்கள், 12 வினாடிகள் யோகாசனம் செய்தனர். 5 நிமிடங்கள் செய்தாலே தேசிய சாதனையாக அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் 12 நிமிடங்கள் 12 வினாடிகள் யோகாசனத்தை தொடர்ந்த மாணவர்களின் சாதனையை, தேசிய சாதனையாக அங்கீகரித்து மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்களை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு நிர்வாகிகள் வழங்கினர். …

The post அரசு பள்ளி மாணவர்கள் யோகாவில் தேசிய சாதனை appeared first on Dinakaran.

Related Stories: